ஆத்திச்சூடியை 30 விநாடியில் பாடி சாதனை படைத்த திருப்பூர் சிறுவன்!

திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்த அதர்வா என்ற 3 வயது சிறுவன் அவ்வையார் எழுதிய ஆத்திச்சூடியை 30 விநாடியில் பாடியுள்ளார். இதனை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சாதனையாக அங்கீகரித்து, சிறுவனுக்கு சான்றிதழும், பதக்கத்தையும் வழங்கி கௌரவித்துள்ளது.



திருப்பூர்: அவ்வையார் எழுதிய ஆத்திச்சூடியை 30 விநாடியில் பாடி சாதனை படைத்துள்ள 3 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் தனபால் - ஐஸ்வர்யா தம்பதி. இவர்களுக்கு 3 வயதில் அதர்வா என்ற மகன் உள்ளார்.



இவர் குழந்தை பருவத்திலேயே பல திறமைகளுடன் வளர்ந்து வருவதை உணர்ந்து கொண்ட இவர்களது பெற்றோர் ஆத்திச்சூடி, திருக்குறள் போன்றவற்றை போதித்து வந்தனர். 



இந்நிலையில் அவ்வையார் எழுதிய ஆத்திச்சூடியை 30 விநாடியில் பாடி சாதனை படைத்துள்ளார் அதர்வா. இதனை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனம் சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்துள்ளது. 



இந்த சாதனை அவர்களது பெற்றோருக்கும் மட்டுமின்றி திருப்பூருக்கே கிடைத்த பெருமையாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சிறுவனுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...