கோவை வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு விலையில்லா மரக்கன்றுகள்!

கோவை மாவட்ட வனத்துறை சார்பில், பசுமை தமிழ்நாடு இயக்கத்தின்‌ கீழ்‌ கோவை மாவட்ட மக்களுக்கு மரநாற்றுகள், தேக்கு, சவுக்கு, புளியன், புங்கன், நெல்லி உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை 2023-24ஆம்‌ ஆண்டில்‌ நடவு செய்வதற்காக மரக்கன்றுகள்‌ விலையில்லாமல்‌ வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்ட மக்களுக்கு வனத்துறை சார்பில் விலையில்லா மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின்‌ பசுமை தமிழ்நாடு இயக்கத்தின்‌ கீழ்‌ கோவை மாவட்ட வனத்துறையின்‌ மூலம்‌, கோவை வனவியல்‌ விரிவாக்க கோட்டத்தின்‌ சார்பில்‌ 2023-24ஆம்‌ ஆண்டில்‌ நடவு செய்வதற்காக மரக்கன்றுகள்‌ விலையில்லாமல்‌ வழங்கப்படவுள்ளது.

இதன் மூலம் பொதுமக்களுக்கு மரநாற்றுகள், தேக்கு, சவுக்கு, புளியன், புங்கன், நெல்லி உள்பட பல்வேறு இன மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன. அதன்படி, கோவை வனவியல்‌ விரிவாக்க கோட்டத்‌தின்‌, விளம்பர சரகம்‌ ॥-ன்‌ மூலம்‌ கோவை, மத்தம்பாளையம்‌ பகுதியில்‌ உள்ள நாற்றங்கால்‌ மூலம்‌ மரக்கன்றுகள்‌ உற்பத்தி செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஆர்வமுள்ளவர்கள்‌ நேரிலோ அல்லது கைப்பேசிவாயிலாகவோ தகவல்களை கேட்டு, விலையில்லா மரக்கன்றுகளை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்‌.

மேலும் தொடர்புக்கு

வனவியல் விரிவாக்க அலுவலர்,

வனவியல் விரிவாக்க கோட்டம்,

கோவை - 641043

வனச்சரக அலுவலர் / விளம்பர அலுவலர்

விளம்பர சரகம் - II

கோவை

தொலை பேசி எண்கள்: 8667266884, 8220151817

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...