கோவை வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு விலையில்லா மரக்கன்றுகள்!

கோவை மாவட்ட வனத்துறை சார்பில், பசுமை தமிழ்நாடு இயக்கத்தின்‌ கீழ்‌ கோவை மாவட்ட மக்களுக்கு மரநாற்றுகள், தேக்கு, சவுக்கு, புளியன், புங்கன், நெல்லி உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை 2023-24ஆம்‌ ஆண்டில்‌ நடவு செய்வதற்காக மரக்கன்றுகள்‌ விலையில்லாமல்‌ வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்ட மக்களுக்கு வனத்துறை சார்பில் விலையில்லா மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின்‌ பசுமை தமிழ்நாடு இயக்கத்தின்‌ கீழ்‌ கோவை மாவட்ட வனத்துறையின்‌ மூலம்‌, கோவை வனவியல்‌ விரிவாக்க கோட்டத்தின்‌ சார்பில்‌ 2023-24ஆம்‌ ஆண்டில்‌ நடவு செய்வதற்காக மரக்கன்றுகள்‌ விலையில்லாமல்‌ வழங்கப்படவுள்ளது.

இதன் மூலம் பொதுமக்களுக்கு மரநாற்றுகள், தேக்கு, சவுக்கு, புளியன், புங்கன், நெல்லி உள்பட பல்வேறு இன மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன. அதன்படி, கோவை வனவியல்‌ விரிவாக்க கோட்டத்‌தின்‌, விளம்பர சரகம்‌ ॥-ன்‌ மூலம்‌ கோவை, மத்தம்பாளையம்‌ பகுதியில்‌ உள்ள நாற்றங்கால்‌ மூலம்‌ மரக்கன்றுகள்‌ உற்பத்தி செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஆர்வமுள்ளவர்கள்‌ நேரிலோ அல்லது கைப்பேசிவாயிலாகவோ தகவல்களை கேட்டு, விலையில்லா மரக்கன்றுகளை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்‌.

மேலும் தொடர்புக்கு

வனவியல் விரிவாக்க அலுவலர்,

வனவியல் விரிவாக்க கோட்டம்,

கோவை - 641043

வனச்சரக அலுவலர் / விளம்பர அலுவலர்

விளம்பர சரகம் - II

கோவை

தொலை பேசி எண்கள்: 8667266884, 8220151817

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...