வால்பாறையில் தீவிபத்திற்குள்ளான உணவகம் - நிதியுதவி வழங்கிய எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே சிட்டி ஹோட்டல் என்ற பெயரில் செயல்பட்டு வந்த உணவகம் தீவிபத்தில் சிக்கிய நிலையில், கடையை மீண்டும் அமைக்க முடியாமல் இருந்த உணவக உரிமையாளருக்கு எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி நிதியுதவியை வழங்கினார்.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்த உணவகத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி நிதி உதவியை வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் புதிய பேருந்து நிலையம் அருகில் சத்தியபாமா என்பவர் சிட்டி ஹோட்டல் என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். கடந்த 21 ஆம் தேதி இரவு இந்த உணவகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு மூன்று லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.

இதனிடையே, கடையை சரி செய்ய முடியாமலும், புதிய பொருட்கள் வாங்க முடியாமலும் கடையின் உரிமையாளர் சத்தியபாமா இருந்து வந்தார்.

இந்நிலையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி வால்பாறை பகுதிக்கு வந்து தீப்பிடித்து சேதம் அடைந்த ஹோட்டல் உரிமையாளரிடம் கடையை மீண்டும் கட்டுவதற்கு கடைக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு நிதி உதவி வழங்கினார்.

இந்நிகழ்வில் வால்பாறை அதிமுக நகர மன்ற செயலாளர் மயில் கணேசன், பொன் கணேசன் மற்றும் பலர் இருந்தனர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...