வால்பாறையில் தீவிபத்திற்குள்ளான உணவகம் - நிதியுதவி வழங்கிய எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே சிட்டி ஹோட்டல் என்ற பெயரில் செயல்பட்டு வந்த உணவகம் தீவிபத்தில் சிக்கிய நிலையில், கடையை மீண்டும் அமைக்க முடியாமல் இருந்த உணவக உரிமையாளருக்கு எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி நிதியுதவியை வழங்கினார்.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்த உணவகத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி நிதி உதவியை வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் புதிய பேருந்து நிலையம் அருகில் சத்தியபாமா என்பவர் சிட்டி ஹோட்டல் என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். கடந்த 21 ஆம் தேதி இரவு இந்த உணவகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு மூன்று லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.

இதனிடையே, கடையை சரி செய்ய முடியாமலும், புதிய பொருட்கள் வாங்க முடியாமலும் கடையின் உரிமையாளர் சத்தியபாமா இருந்து வந்தார்.

இந்நிலையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி வால்பாறை பகுதிக்கு வந்து தீப்பிடித்து சேதம் அடைந்த ஹோட்டல் உரிமையாளரிடம் கடையை மீண்டும் கட்டுவதற்கு கடைக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு நிதி உதவி வழங்கினார்.

இந்நிகழ்வில் வால்பாறை அதிமுக நகர மன்ற செயலாளர் மயில் கணேசன், பொன் கணேசன் மற்றும் பலர் இருந்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...