கோவையில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை திருடிய நபர் கைது!

கோவை அன்னூரை சேர்ந்த முகமது அலிபகத் என்பவர் தனது வீட்டுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான சொகுசு பைக்கை திருடிச்சென்ற அப்துல் ரகுமான் (21) என்பவரை கைது செய்த போலீசார் திருடப்பட்ட சொகுசு பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே சொகுசு பைக்கை திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம், அன்னூரை சேர்ந்தவர் முகமது அலி பகத். இவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது அவரது இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாது நபர் திருடி சென்றுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு அன்னூர் போலீசார் பதிவு செய்தனர். இந்நிலையில் அன்னூர் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் பசூர் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை பிடித்து விசாரித்த போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். இதனால் அவரை காவல் நிலையம் அழைத்து விசாரித்த போது முகமது அலி பகத்-ன் இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற இளைஞர் என்பது தெரியவந்தது.

விசாரணையில் அவர் அப்துல் மஜ்கார் மகன் அப்துல் ரகுமான் (21) என்பதும், இரு சக்கர வாகனத்தை திருடி விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...