கோவை தெற்கு மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு - திட்டங்களையும் தொடங்கி வைத்தார்!

கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் நடைபெற்று வரும் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் மற்றும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கோவை: கோவை தெற்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உலக சுற்றுச்சூழல்‌ தினத்தை முன்னிட்டு கோவை‌ மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில்‌ தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமை தமிழகம்‌ திட்டம்‌, பொதுமக்களின்‌ தூய்மை நகரம்‌ திட்டத்தின் கீழ்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ 5 மண்டலங்களுக்கும்‌ தலா 200 மரக்கன்றுகள்‌ வீதம்‌ 1000 மரக்கன்றுகளை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ வழங்கினார்‌.



கோவை தெற்கு மண்டலம்‌ வார்டு 87க்கு உட்பட்ட புட்டுவிக்கி பிரதான சாலையில்‌ ரூ.186 லட்சம்‌ மதிப்பீட்டில் 2200 மீட்டர்‌ தொலைவிற்கு தார்சாலை அமைக்கும்‌ பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌,



இதேபோல், கோவை‌ தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.97க்கு உட்பட்ட பிள்ளையார்புரம்‌ பகுதியில்‌ ரூ.62 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ உயர்மட்ட பாலம்‌ கட்டுமான பணி நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



கோவை‌ தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.100க்கு உட்பட்ட மேட்டூர்‌ சாலை, நாச்சிமுத்து கவுண்டர்‌ வீதியில்‌ தமிழ்நாடு நிலையான நகா்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டு திட்டம்‌ |||-ன் கீழ்‌ ரூ.24 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 405 மீட்டர் தொலைவிற்கு தார்சாலை அமைக்கும்‌ பணி நடைபெற்று வருகிறது. இதனை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...