கோவையில் விழிப்புணர்வு கண்காட்சியை தொடங்கி வைத்த மாநகராட்சி ஆணையர்!

உலக சுற்றுச்சூழல்‌ தினத்தை முன்னிட்டு கோவை வாலாங்குளத்தில்‌ மாநகராட்சி மற்றும்‌ டாக்டர்‌ கலாம்‌ பவுண்டேசன்‌ இணைந்து பயன்படுத்தப்பட்ட சிகரெட்‌ கழிவுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களின்‌ விழிப்புணர்வு கண்காட்சியை ஆட்சியர் கிராந்திகுமார்‌ பாடி, மாநகராட்சி ஆணையர் பிரதாப்‌ ஆகியோர்‌ துவக்கி வைத்தனர்.

கோவை: கோவை மாவட்டம் வாலாங்குளம் மற்றும் உக்கடம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி துவங்கி வைத்தார்.



உலக சுற்றுச்சூழல்‌ தினத்தை முன்னிட்டு கோவை‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வாலாங்குளத்தில்‌ மாநகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ டாக்டர்‌ கலாம்‌ பவுண்டேசன்‌ இணைந்து பயன்படுத்தப்பட்ட சிகரெட்‌ கழிவுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட மெத்தை, தலையணை, யோகா மேட்‌ மற்றும்‌ பொம்மைகள்‌ ஆகிய பொருட்களின்‌ விழிப்புணா்வு கண்காட்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்‌ கிராந்திகுமார்‌ பாடி, மாநகராட்சி ஆணையர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ துவக்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்டனர்‌.

முன்னதாக, பந்தய சாலை (ரேஸ்கோர்ஸ்‌ மீடியா) தாமஸ்‌ பூங்கா பகுதியில்‌ சிறப்பு தூய்மை பணியினை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ 110 INFBN (TA) Madras கமாண்டிங்‌ ஆபீசர்‌ கானல்‌ தினேஷ்‌ சிங்‌ டென்வா ஆகியோர்‌ தொடங்கி வைத்து, மக்கும்‌ குப்பை, மக்கா குப்பையை தரம்‌ பிரித்து சேகரித்தனர்‌.

அதனைத் தொடர்ந்து, கோவை‌ மாநகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ Forest by Heartfulness, Rotary Saicity & Skal Inernational ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனம்‌ இணைந்து, உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ 4000 மரக்கன்றுகள்‌ நடும்‌ பணி,

மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில்‌ மரக்கன்றுகள்‌ நடும்‌ பணி மற்றும்‌ மாநகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ சிறுதுளி அமைப்புடன்‌ இணைந்து வாலாங்குளம்‌ சுங்கம்‌ பகுதியில்‌ மரக்கன்றுகள்‌ நடும்‌ பணியினை மாநகராட்சி ஆணைய‌ர் பிரதாப்‌ மரக்கன்று நட்டுவைத்து பணிகளை தொடங்கி வைத்து, மரக்கன்றுகள்‌ வழங்கினார்‌.

பின்னர்‌, வாலாங்குளத்தில்‌ கோயம்புத்தார்‌ மாநகராட்சி மற்றும்‌ சிறுதுளி, ஆக்ஸிஸ்‌ வங்கி ஆகிய தொண்டுநிறுவனம்‌ இணைந்து நீர்நிலைகளை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ விதத்தில்‌ குளத்தின்‌ கரைகளை சுற்றி பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ சேகரிக்கும்‌ பணியை மேற்கொண்டு, தன்னார்வலர்கள்‌ மூலம்‌ குளக்கரைகளை சுத்தம்‌ செய்தனர்‌.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...