கணவரை தாக்கி சொத்துக்களை அபகரிக்க முயன்ற மனைவி - ஆட்சியர் அலுவலகத்தில் புகார்!

திருப்பூர் மாவட்டம் பெருந்தொழுவு பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது மனைவி தங்கமணி, அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தனது சகோதரிக்கு தான் எழுதி கொடுத்த நிலத்தை அபகரிக்க முயன்று தன்னை தாக்கியதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.



திருப்பூர்: தன்னை தாக்கி தனது சொத்துக்களை அபகரிக்க முயன்றதாக திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி மீது கணவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பெருந்தொழுவு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு தங்கமணி என்பவரை திருமணம் செய்துள்ளார். முருகேசன் தனக்கு சொந்தமான 3.25 செண்ட் நிலத்தில் வீடு கட்டி இருந்த நிலையில், இருவரும் அதில் வசித்து வந்துள்ளனர். 

இந்நிலையில் தங்கமணிக்கு உடல்நிலை சரியில்லாததால் முருகேசன் பல இடங்களில் கடன் பெற்று அவருக்கு சிகிச்சை பார்த்து வந்துள்ளார். மேலும் தனது சகோதரி மல்லிகாவிடம் பெற்ற கடனுக்காக தனது வீட்டை சகோதரி பெயரில் கிரயம் செய்துவிட்டு மேற்கொண்டு சிகிச்சைக்காக 4 லட்சம் பெற்றுள்ளார்.

இதனிடையே தனது சகோதரிக்கு வீட்டை கிரயம் செய்து விட்ட நிலையில் தன்னை விட்டு பிரிந்து சென்று வாழ்ந்து வரக்கூடிய தங்கமணி கடந்த சனிக்கிழமை அவரது உறவினர்களோடு சகோதரியின் வீட்டில் அத்துமீறி நுழைந்துள்ளார். 



இது குறித்து தான் கேட்க சென்றபோது தன்னை தாக்கியது மட்டுமல்லாமல் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...