லோன் ஆப் மூலம் ஏமாந்தவர்களில் ஐ.டி. ஊழியர்கள் அதிகம் - கோவை மாவட்ட எஸ்பி தகவல்!

லோன் ஆப் மூலம் ஏமாந்தவர்களில் ஐ.டி நிறுவன ஊழியர்கள் அதிகம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது எனவும், அவர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.



கோவை: லோன் ஆப் மூலம் ஐ.டி. ஊழியர்கள் அதிக அளவில் ஏமாந்துள்ளதாக கோவை மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மீட்கபட்ட செல்போன்கள் இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



இந்த நிகழ்வில் 30 லட்ச ரூபாய் மதிப்புடைய 162 மொபைல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



இதில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கலந்து கொண்டு செல்போன்களை தவறவிட்டவர்கள், பறிகொடுத்தவர்களிடம் அவற்றை ஒப்படைத்தார். 



இதன் பின்னர் எஸ்.பி. பத்ரி நாராயணன் செய்தியாளர்களை சந்தித்த போது பேசியதாவது,



கடந்த ஏப்ரல் முதல் 1160 செல்போன்களை மீட்டு கொடுத்து இருக்கின்றோம்.

இது வரை இரண்டு கோடி ரூபாய் மதிப்புடைய செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் நடந்த 22 கொலை வழக்குகளில் அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகள் பிடிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 20 மேற்பட்டவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 177 லாட்டரி வழக்குகள் பதியப்பட்டு 15 லட்சம் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போதை தொடர்பாக 280 வழக்குகள் பதியப்பட்டு 503 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யபட்டுள்ளது எனவும் இதன் மதிப்பு 53 லட்சம் ஆகும். சைபர் கிரைமில் 6.50 கோடி மதிப்புடைய பணம் மோசடி புகார்கள் வந்துள்ளது. இதில் 6 கோடி ரூபாய் வரை வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு நீதிமன்றம் மூலம் பணத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

லோன் ஆப் மூலம் ஏமாந்தவர்களில் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் அதிகம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அவர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கோவை புறநகர் பகுதியில் 85 விளம்பர பலகைகள் இதுவரை அகற்றப்பட்டு உள்ளது. விளம்பர பேனர்களை மட்டும் அகற்றாமல் அதை பொறுத்தும் கம்பிகளையும் அகற்ற சொல்லி நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

கருமத்தம்பட்டி பேனர் விவகாரத்தில் தலைமறைவாக உள்ள இருவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...