அவிநாசி அரசு மருத்துவமனை, வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆட்சியர் திடீர் ஆய்வு!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, நாதம்பாளையம் ரேஷன் கடை, முதலிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.



திருப்பூர் மாவட்ட ஆட்சியராக சேலம் மாநகராட்சி ஆணையாளராக பணிபுரிந்து வந்த கிறிஸ்துராஜ் கடந்த வாரம் பதவி ஏற்றுக்கொண்டார்.



இந்நிலையில், இன்று அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 



இதேபோல், நாதம்பாளையத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடை, முதலிபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார். 



அப்போது பள்ளியில் கூடுதலாக கட்டப்பட்டு வரும் வகுப்பறைகள் மற்றும் அவிநாசி ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்குள் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளிடம் நேரடியாக கேட்டறிந்தார். 



மேலும் பொது மக்களுக்கு எந்த வித இடையூறும் இல்லாமல் விரைந்து பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...