மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி கோவையில் தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றசாட்டுக்கு உள்ளான பாஜக எம்.பி பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாகவும் கோவையில் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி கோவையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



மல்யுத்த வீரர்களுக்கு நீதி கேட்டு கோவை ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மத்திய தந்தி அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து தொழிற்சங்கங்களான ஐ என் டி யு சி, ஏ ஐ டி யு சி, ஹெச் எம் எஸ், சி ஐ டி யு, எம் எல் எப், எஸ் டி டி யு, எம் எல் எப் போன்ற அமைப்புகளின் சார்பில் பாஜக எம்.பியான பிரிஜ் பூசன் சரண்சிங்- ஐ கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மேலும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் என்ற பதவியை அவர் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் மல்யுத்த வீரர்கள் மீது போடப்பட்ட போராட்ட வழக்குகளை டெல்லி காவல்துறையினர் திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது. 



அமைதியான முறையில் போராட்டம் நடத்திய வீரர்கள் மீது டெல்லி காவல்துறையினர் நடத்திய தாக்குதல்கள் மற்றும் அத்துமீறல்களை கண்டித்தும் பாஜக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினார்.

கோவையில் உள்ள தொழிற்சங்கங்கள் சார்பில் மல்யுத்த வீரர்களுக்கான போராட்டத்தில் தொடர் பங்களிக்கப்படும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...