சூலூர் அருகே மதுபான கூடத்திற்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

சூலூர் அருகேயுள்ள கருமத்தம்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான கூடம் முறையான அனுமதியின்றியும், 24 மணி நேரமும் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதால், அதனை பூட்டி சீல் வைக்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக மகளிரணி சார்பில் மதுபான கூடத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: சூலூர் அருகே சட்டவிரோதமாக 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் மதுபான கூடத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுற்றுத்தி பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சூலூர் அருகேயுள்ள கருமத்தம்பட்டியில் தனியார் மதுபான கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக்கூடம் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு கருமத்தம்பட்டி நகராட்சியில் முறையான அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. 

மேலும் சட்டவிரோதமாக 24 மணிநேரமு செயல்பட்டு வருவதாக கூறி மதுபான கூடம் முன்பு பாஜக மாவட்ட மகளிர் அணி பொருளாளர் கார்த்திக்காயணி தலைமையில் கருமத்தம்பட்டி பாஜகவினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, கடந்த 2 வருடங்களாக அனுமதியற்ற கட்டிடத்தில் தனியார் மதுபான கூடம் இயங்கி வருகிறது. 24 மணி நேரமும் இந்த கடை செயல்படுகிறது. எனவே இந்த கடையை உடனே சீல் வைத்து பூட்ட வேண்டும் என தெரிவித்தனர். 

இதையடுத்து போலீசார் சிறிது நேரம் கடையை மூடினர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினர். 

இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் சமாதானமாகி அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே அங்கு வந்த கருமத்தம்பட்டி டி.எஸ்.பி தையல்நாயகி சம்மந்தப்பட்ட தனியார் மதுபான கூடத்தை ஆய்வு செய்தார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...