கோவையில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் - பரபரப்பு!

சுந்தராபுரம் அருகேயுள்ள குருசாமி பிள்ளை வீதியை சேர்ந்த அப்துல் ஜபாரின் வீட்டிற்கு அடிக்கடி போலீஸ் வருவதால், வாடகை வீட்டு உரிமையாளர் காலி செய்ய சொன்னதால், மனமுடைந்த அப்துல் ஜபார், சாரதா மில் அருகேயுள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் சுந்தராபுரம் அருகே செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. 

கோவை போத்தனூர் அடுத்த குருசாமி பிள்ளை வீதியை சேர்ந்தவர் அப்துல் ஜபார் (45). ஆட்டோ ஓட்டுனரான இவரது மகன் ஹாரூன் பாஷா (24) என்பவர் மீது ரேஷன் அரிசி கடத்தல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

இதனால் அடிக்கடி வழக்கு விசாரணைக்காக போலீசார் அப்துல் ஜபாரின் வீட்டிற்கு வந்து சென்றதாக தெரிகிறது. போலீசார் அடிக்கடி வருவதால் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். 

இதில் மனமுடைந்த அப்துல் ஜபார் சுந்தராபுரம் சாரதா மில் சந்திப்பில் உள்ள செந்தில்குமார் என்பரது வீட்டின் மேலே இருந்த செல்போன் டவர் மீது ஏரி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். 

தகவல் அறிந்து வந்த போத்தனூர் உதவி ஆய்வாளர் ஜெசிஸ் உதயராஜ், ஜபாருடன் நீண்ட நேரம் பேசி சமாதானம் செய்து அவரை கீழே இறக்கி, எச்சரித்து அனுப்பி வைத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...