பல்லடம் அருகே கார் மீது லாரி மோதி விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் காயம்!

கோவையிலிருந்து திருமண நிகழ்வுக்காக கரூர் நோக்கி சென்ற கார் மீது பல்லடம் அடுத்த மாதப்பூர் என்ற இடத்தில் கேரளாவிற்கு சென்ற லாரி மோதிய விபத்தில் 2 பெண்கள், 2 சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் படுகாயமடைந்தனர்.



திருப்பூர்: பல்லடம் அடுத்த மாதப்பூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பல்லடம் அருகே இன்று காலை 10 மணி அளவில் கோவையில் இருந்து கரூர் நோக்கி திருமண நிகழ்விற்காக காரில் பயணித்த குடும்பத்தினர் திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர்.



இந்நிலையில் கார், பல்லடம் அருகே மாதப்பூர் என்ற இடத்தில் சென்றபோது கரூரிலிருந்து கேரளாவிற்கு சென்ற லாரி ஒன்று கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மகாலட்சுமி(27), சோமுகுமார்(38), பிரனேஷ்(38), நித்திஷ்(11), க்ரிதீஷ்(11), மற்றும் சசிரேகா(57) ஆகிய ஆறு பேர் பலத்த காயமடைந்தனர். 



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பல்லடம் காவல்துறையினர் காயமடைந்த ஆறு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆறு பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 



விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் பல்லடத்தில் இருந்து பொங்கலூர் வரை சாலையின் நடுவே தடுப்புகள் வைக்காததே இந்த விபத்திற்கு காரணம் எனவும் அதிக அளவிலான விபத்துகளை தடுக்க சாலை நடுவே தடுப்புகள் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...