மதுக்கரை நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்!

தொழிலாளர்களுக்கு எதிரான நிபந்தனைகளை கொண்ட உறுதி மொழி பத்திரத்தில் கையெழுத்திடும்படி கூறும் ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்து மதுக்கரையில் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தி ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



கோவை: மதுக்கரை நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை மதுக்கரை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சுமார் 62 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனம் ஊழியர்களுக்கு உறுதிமொழி பத்திரத்தை வழங்கி அதில் கையெழுத்திடும்படி தெரிவித்துள்ளனர். 



மொத்தம் 22 நிபந்தனைகளை கொண்ட அந்த உறுதிமொழி பத்திரத்தில் தொழிலாளர்களுக்கு எதிரான பல்வேறு அம்சங்கள் உள்ளதாக கூறி அதில் கையெழுத்திட ஊழியர்கள் மறுத்துள்ளனர். ஆனால் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டால் தான் வேலை செய்ய முடியும் என கூறியதால் நேற்று மதியம் முதல் 62 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து நகராட்சி அலுவலகத்திலேயே காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 



நேற்று இரவு முழுவதும் அங்கேயே உணவு சாப்பிட்டு தூய்மை பணியாளர்கள் தங்கிய நிலையில், இரண்டாவது நாளாக மீண்டும் பணியை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...