கோவையில் அரசு பொருட்காட்சி மூலம் ரூ.13.99 லட்சம் வருவாய் - ஆட்சியர் தகவல்!

கோவை காந்திபுரத்தில் உள்ள சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் கடந்த 16 நாட்களாக நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சியினை ஒரு லட்சத்து 93 பேர் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.13.99 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: காந்திபுரம் அருகே நடைபெற்ற அரசு பொருட்காட்சியின் மூலம் இதுவரை ரூ.13.99 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது, காந்திபுரம் பகுதியில் உள்ள சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் கடந்த 13ம் தேதி முதல் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அரசுப் பொருட்காட்சி நடைபெற்று வருகின்றது.



இந்த பொருட்காட்சியில் 27 அரசுத்துறை அரங்குகளும், 6 அரசுசார்பு நிறுவனங்கள் என மொத்தம் 33 அரசுத்துறை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசின் திட்டங்கள் மட்டுமின்றி பொழுதுபோக்கு அம்சங்களும் இப்பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

அரசுப்பொருட்காட்சியை காண வரும் பெரியவர்களுக்கு 15 ரூபாயும் சிறியவர்களுக்கு 10 ரூபாயும் பள்ளிகள் மூலம் அழைத்து வரப்படும் மாணவ மாணவியர்களுக்கு சலுகை கட்டணமாக 5 ரூபாயும் நுழைவுக் மாணவ கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று வரை நடைபெற்ற 16 நாட்களில் அரசு பொருட்காட்சியினை பெரியவர்கள், சிறியவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 93 நபர்கள் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் 13 லட்சத்து 99 ஆயிரத்து 125 ரூபாய் அரசுக்கு வருவாய் வரப்பெற்றுள்ளது.

இவ்வாறு அந்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...