சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியை தடுக்க கோரி சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூர் மேயரிடம் அதிமுக உறுப்பினர்கள் மனு!

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டி வரும் கேரளா அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தும் வகையில் திருப்பூர் மாநகராட்சியில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மாநகராட்சி மேயரிடம் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

திருப்பூர்: சிறுவாணியின் குறுக்கே கேரள அரசின் அணை கட்டும் முயற்சியை தடுக்க கோரி திருப்பூர் மாநகராட்சியில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற கோரி மேயரிடம் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலக மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக குழு தலைவருமான அன்பகம் திருப்பதி கூட்டத்தில் பேசினார்.



அப்போது அவர் பேசியதாவது, திருப்பூருக்கு வரக்கூடிய தண்ணீரின் அளவு பாதிக்கக் கூடிய வகையில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இதனை தடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், அனைத்து கட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி அதன் பாதிப்பை உடனடியாக தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.



இது தொடர்பாக பேசிய மாநகராட்சி மேயர் ஏற்கனவே இது தொடர்பாக மாவட்ட அமைச்சர்கள் மூலமாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது. எக்காரணம் கொண்டும் திருப்பூரில் தண்ணீர் வரத்து பாதிக்காத வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...