கோவையில் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் நேரில் ஆய்வு!

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், கோவை மாநகரில் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, அதன் தரம் எவ்வாறு உள்ளது என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.



கோவை: கோவை மாநகரில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இன்று தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. வட்டார போக்குவரத்து துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வாகனங்களை நேரில் ஆய்வு செய்தனர்.



கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 7-ம் தேதி திறக்க உள்ள நிலையில் பள்ளி வாகனங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா என்பதை கூட்டாக ஆய்வு செய்தனர்.



ஆய்விற்கு பின்னர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, கோவை மாநகரில் உள்ள 4 வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட 230 பள்ளிகளில் இருந்து 1355 பள்ளி வாகனங்கள் இன்று சோதனை செய்யப்படுகிறது.



மேலும் வாகன ஓட்டுனர்களுக்கு கண்பரிசோதனையும் செய்யப்படுகிறது. வாகனம் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய 17 வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அவசர வழி, சிசிடிவி கேமரா, பிரேக், வேக கட்டுப்பாட்டு கருவி, ஜி.பி.எஸ் போன்றவை இருக்கிறதா என்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றி பள்ளி வாகனங்கள் இருக்கிறதா என்பதை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். இதேபோல புறநகர் பகுதிகளிலும் பள்ளி வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தபடுகின்றன.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...