வால்பாறை பிர்லா அருவியில் புகைப்படம் எடுத்த போது தவறி விழுந்து சுற்றுலா பயணி மாயம்!

வால்பாறைக்கு சுற்றுலா வந்த கோவையை சேர்ந்த ஜாகர் (21) பிர்லா அருவியில் புகைப்படம் எடுக்கும் போது தவறி விழுந்து நீரில் மூழ்கிய மாயமான நிலையில், தகவலின் பேரில் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினர் மாயமான இளைஞரை தேடும்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை: வால்பாறைக்கு சுற்றுலா வந்த இளைஞர் ஒருவர் பிர்லா அருவியில் புகைப்படம் எடுத்த போது நீரில் மூழ்கி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ஜாஜூ என்பவரது மகன் ஜாகர் (21). இவர் தனது பெண் தோழியுடன் வால்பாறைக்கு நேற்று சுற்றுலா வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வால்பாறை பகுதியில் சுற்றி பார்த்துவிட்டு இன்று காலை வால்பாறை அருகே சோலையாறு எஸ்டேட் பகுதியில் உள்ள பிர்லா பால்ஸ் அருவிக்கு சென்றுள்ளனர்.

அங்கு அருவி அருகில் சென்று புகைப்படம் எடுக்க முயன்றபோது கால் தவறி ஜாகர் தண்ணிருக்குள் விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற அவரது தோழியும் தண்ணிரில் குதித்துள்ளார். ஜாகர் நீரில் மூழ்கிய நிலையில், அந்த பெண் தண்ணிரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

தண்ணிரில் மூழ்கிய நண்பரை அருகில் உள்ளவர்கள் உதவியுடன் காப்பாற்ற முயன்றுள்ளார்.



இதனையடுத்து தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நீரில் மூழ்கியவரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



புகைப்படம் எடுக்க சென்று நீரில் மூழ்கி வாலிபர் மாயமான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...