அரசு விழாக்களில் கும்மியாட்டத்திற்கு அனுமதியளிக்க வேண்டும் - பல்லடம் அருகே கும்மியாட்ட குழுவினர் கோரிக்கை!

அழிந்து வரும் கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான கும்மியாட்டத்தை மீட்டுருவாக்கம் செய்ய அரசு விழாக்களில் கும்மியாட்டத்திற்கு அனுமதி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள இடுவாய் கிராமத்தில் நடைபெற்ற கும்மியாட்ட அரங்கேற்ற விழாவில் கும்மியாட்ட குழுவினர் கோரிக்கை விடுத்தனர்.


திருப்பூர்: அரசு விழாக்களில் கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான கும்மியாட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என பவளக்கொடி கும்மியாட்ட குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல்லடம் அருகேயுள்ளா இடுவாய் கிராமத்தில் இன்று பவளக்கொடி கும்மி ஆட்ட குழுவினரின் 42வது கும்மியாட்ட அரங்கேற்ற விழா நடைபெற்றது. பெண்கள், குழந்தைகள், ஆண்கள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் ஒரே சீருடையில் காலில் சலங்கை கட்டிக்கொண்டு கைகளை தட்டி கும்மியடித்து மகிழ்ந்தனர்.

மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்களில் அர்ஜுனனின் அரச வாழ்க்கை, அவர் அரசாண்ட பகுதியில் மக்கள் மீதும் மண் மீதும் அவர் வைத்த பற்று, அவரது திருமண வாழ்க்கையின் கதையினை பாடல்களாக பாடி நான்கு மணி நேரம் கும்மியாடினர். ஒரே சீருடையில் 150க்கும் மேற்பட்டோரின் கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்வு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.



மேலும் கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான கும்மியாட்டத்தினை கற்றுக் கொள்வதால் மனமும் உடலும் ஒரு சேர கட்டுப்பாட்டுடன் இருப்பதாகவும், அழிவின் விளிம்பில் உள்ள கும்மியாட்டத்தை மீட்டு உருவாக்கம் செய்து பட்டி தொட்டி எங்கும் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசின் சுதந்திர தின விழா, 

குடியரசு தின விழா போன்ற அரசு விழாக்களில் நடைபெறும் அணிவகுப்புகளில் கும்மி ஆட்டத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து அனுமதி அளிக்க வேண்டும் என அரசுக்கு கும்மியாட்ட குழுவினர் கோரிக்கை வைத்தனர்.

கைபேசி பயன்பாட்டில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க கும்மியாட்ட கலை உதவுவதாகவும், கைகளை தட்டி நடனம் ஆடும் போது உடலில் உள்ள அனைத்து பாகங்களும் புத்துணர்வு பெறுவதாகவும் இளம் தலைமுறை இந்த கும்மியாட்டத்தை கொண்டு சேர்க்க உதவும் வகையில் தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...