கோவையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்!

கோவை மேட்டுப்பாளையம் அடுத்த சிக்காரம்பாளையத்தை சேர்ந்த பிரபு என்பவர் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் ஆகிய உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு, 3 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.



கோவை: கோவையில் விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு மூன்று பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிக்காரம்பாளையத்தை சேர்ந்தவர் பிரபு (40). இவர், கடந்த 24 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி தலையில் படுகாயம் அடைந்தார். 

இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு மூளை சாவு அடைந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். 

இந்நிலையில், பிரபுவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் முன் வந்தனர். இதனையடுத்து, பிரபுவின் கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டன. இதன் மூலம் மூன்று பேர் மறுவாழ்வு பெற்றனர். 

இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறியதாவது, தானம் செய்தவரின் உடல் உறுப்புகள் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி, ஒரு சிறுநீரகம் கோவை அரசு மருத்துவமனை உள்நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனை உள் நோயாளிக்கும், கல்லீரல் கோவையில் தனியார் மருத்துவமனை நோயாளிக்கும் தானமாக வழங்கப்பட்டது. 

உடல் உறுப்புகளை தானமாக வழங்கியவரின் குடும்பத்தினருக்கு மருத்துவமனை முதல்வர் நன்றி தெரிவித்தார்.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...