கோவை போத்தனூர் ரயில் நிலைய மின்கம்பத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!

கோவை போத்தனூர் ரயில் நிலைய நடைமேடை அருகேயுள்ள மின்கம்பத்தில் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: போத்தனூர் ரயில்வே நடைமேடை அருகே மின்கம்பத்தில் தூக்கிய தொங்கிய நிலையில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

போத்தனூர் ரயில் நிலைய பிளாட்பார்ம் அருகே உள்ள ரயில்வே மின் கம்பத்தில் அடையாளம் தெரியாத நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதாக அங்கிருந்தவர்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். 



இதனையடுத்து அங்கு விரைந்து வந்த போத்தனூர் ரயில்வே போலீசார், மின் கம்பத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் தூக்கில் தொங்கியவர் யார்? எதற்காக வந்தார்? எப்போது சம்பவம் நடந்தது? என்பது குறித்து ரயில்வே போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முதல் கட்டமாக நடைமேடையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...