வால்பாறையில் இன்று கோடை விழா தொடக்கம் - 3 நாட்கள் நடக்கிறது!

வால்பாறையில் நடப்பாண்டு கோடை விழா இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ள நிலையில், இன்று நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா மற்றும் நகர மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து, தாவரவியல் பூங்காவை பார்வையிட்டனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கோடை விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. 

கோவை மாவட்டம் வால்பாறையில் கோடை விழாவானது இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற கோடை விழாவின் துவக்க நிகழ்ச்சியில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா மற்றும் நகர மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி ஆகியோர் கலந்து கொண்டு கொடி ஏற்றி கோடை விழாவை துவக்கி வைத்தனர்.



கோடை விழா நடைபெறும் வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது. கோடை விழாவின் நுழைவாயில் பகுதியில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. ஊட்டியில் இருந்து கொண்டு வரப்பட்ட ஜேர்பார், ரோஜா, டென் ரோ பியம், புளூடெய்சி, பல வண்ண கார்னேசன் உள்பட 6,500 மலர்களால் இந்த மலர் கண்காட்சி நடைபெறுகிறது. 

இதில் செல்பி ஸ்பாட், வண்ணத்து பூச்சி, மிக்கி மவுஸ் ஆகியவை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மேலும் 250 காய்கறிகள் மூலம் வரையாடு, கோடைவிழா சின்னமான இருவாச்சி பறவை, சிங்கவால் குரங்கு ஆகியவற்றின் உருவங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. 



சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு படகுசவாரி, சார் ஆட்சியர் பிரியங்கா மற்றும் நகராட்சி தலைவர் அழகு சுந்தர வள்ளி மற்றும் நகர மன்ற துணை தலைவர் செந்தில் குமார் ஆகியோர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.



பின்னர் தாவரவியல் பூங்காவை பார்வையிட்டனர். 

மேலும் இங்கு வனத்துறை சார்பில் இயற்கை பொருட்களை கொண்ட அரங்கம் அமைத்து புலி, சிறுத்தை, போன்ற வன விலங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் பரதநாட்டியம், யோக நடனம், கரகாட்டம், காவடி ஆட்டம், படுகர் இன நடனம், முருகன் வள்ளி கும்மி பாட்டு, பழங்குடியினர் நடனம், வாத்தியம், காவல்துறையின் நாய்கள் சகாசம், நாய்கள் கண்காட்சி, டீ தூள் தயாரிப்பு போட்டி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

தாவரவியல் பூங்கா பராமரிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. கோடை விழாவின் நிறைவு நாளில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...