இணையவழி குற்றங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்!

கோவையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்கு காவல் நிலையங்களை திறந்து வைத்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, கோவை மாநகரில் ஏற்கனவே 15 காவல்நிலையங்கள் இருந்த நிலையில், தற்போது, 20 காவல்நிலையங்களாக உயர்ந்துள்ளது. குற்றங்களை தடுக்க இந்த காவல் நிலையங்கள் இணைப்பு அவசியம் என்றும் அவர் கூறினார்.


கோவை: கோவை மாநகரில் உள்ள காவல் நிலையங்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

கோவை மாநகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கவுண்டம்பாளையம், ஆத்துப்பாலம், சுந்தராபுரம் மற்றும் கோவை தெற்கு மகளிர் காவல் நிலையம் உட்பட 4 புதிய காவல் நிலையங்களை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இன்று திறந்து வைத்தார்.

முன்னதாக போத்தனூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, தமிழகத்தில் மொத்தம் உள்ள 1352 காவல் நிலையங்களில் 202 மகளிர் காவல் நிலையங்கள் இருக்கிறது. குறிப்பாக காவல் உட்கோட்டங்களுக்கு சுமார் 5 முதல் 10 மகளிர் காவல் நிலையங்கள் உள்ளது.

ஒவ்வொரு உட்கோட்டத்திற்கும் மகளிர் காவல் நிலையங்கள் அமைக்க முதல்வர் உத்தரவிட்டதை தொடர்ந்து 10 காவல் நிலையங்கள் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் 1570 காவல் நிலையங்களாக உயர்ந்துள்ளது. கோவை மாநகர் தெற்கில் புதிதாக மகளிர் காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் எளிதாக சென்று புகார் அளிக்க முடியும்.

கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற கார் வெடிப்பு நிகழ்விற்கு பிறகு கோவை மாநகர காவல் நிலையங்களை வலுசேர்க்கவும், விரிவாக்கம் செய்யவும் முதல்வர் உத்தரவின் பேரில் 3 கூடுதல் காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோவை துடியலூர் , வடவள்ளி காவல் நிலையங்கள் மாநகர காவல் துறையில் இணைய உள்ளது.

கோவை மாநகரில் 15 காவல் நிலையங்கள் இருந்த நிலையில் தற்போது மாநகரில் 20 காவல் நிலையங்களாக உயர்ந்துள்ளது. குற்றங்களை தடுக்க இந்த காவல் நிலையங்கள் இணைப்பு அவசியம். சைபர் குற்றங்கள் அதிகளவு உள்ளதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இணையவழி குற்றங்களுக்கு 1930 எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும்.

இணைய வழி குற்றங்களை பொறுத்தவரை அதிக பணம் முதலீடு செய்யும் வரை காத்திருந்து அதிக பணம் சேர்க்க வேண்டுமென ஆசைக்காட்டி பிறகு ஏமாற்றுவார்கள் அவ்வாறு நீங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தால் உடனடியாக 1930 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும்.

இக்குற்றங்களில் உள்ளூர் அல்லது இந்தியாவிற்குள் உள்ள குற்றவாளிகளை எளிதாக பிடித்து விடும் நிலையில், வெளிநாடு குற்றவாளிகளை பிடிப்பதில் சிறிது சிரமம் உள்ளது. காவல்துறை சார்பில் மக்களுக்காக காவல் உதவி என்ற ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 66 வகையான உதவிகளை பெற முடியும். ஆனால் இந்த செயலியை பலரும் பதிவிறக்கம் செய்யவில்லை. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் செயலிகளாவும் மிகவும் பயனுள்ள செயலியாக இருக்கும்.

தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் வருமானவரித்துறை சோதனையின் போது அதிகாரிகளின் வாகனங்கள் சேதப்படுத்தியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அதற்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளக்கம் அளித்து விட்டார் என பதில் அளித்தார். 

மேலும் காவலர்களின் பதவி உயர்வு குறித்தான கேள்விக்கு 130 இன்ஸ்பெக்டர்களுக்கு ஓரிரு மாதங்களில் பதவி உயர்வு வழங்கப்படும் எனவும் அதனை தொடர்ந்து 1030 உதவி இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...