கோவை குனியமுத்தூர் ஆதீசுவரர் கோவில் திருவிழா - ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

கோவை குனியமுத்தூர் ஆதீசுவரி உடனுறை ஆதீசுவரர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா திருநெறிய தமிழ்முறைப்படி கோலகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு தரிசனம் செய்தனர்.


கோவை: குனியமுத்தூர் ஆதீசுவரி உடனுறை ஆதீசுவரர் திருக்கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

கொங்குநாட்டில் 1000 ஆண்டுகள் காலம் தொன்மையுடைய இராசகேசரி பெருவழியை ஒட்டி அமைந்துள்ள குனியமுத்தூர் ஜே.ஜே.நகர் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு காளிமுத்து அடிகளார் சிவலிங்கத்தை வழங்கினார்.



அதே பகுதியில் உள்ள விநாயகர் கோவில் வளாகத்தில் கருவறை அர்த்த மண்டபத்துடன் அமைத்து ஆதீசுவரர் என அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர்.

இந்நிலையில் அர்த்த மண்டபம் புனரமைக்கப்பட்டு,ஆதீசுவர்ருக்கு புதிய திருமேனி செய்யப்பட்டு, விநாயகர், தென்முகப்பரமன், அண்ணாமலையார், பிரம்மா, கொற்றவை ஆகிய தெய்வங்கள் பதிட்டை செய்யப்பட்டு,அருள்மிகு ஆதிசுவரி உடனுறை ஆதீசுவரர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா திருநெறிய தமிழ்முறைப்படி நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு,கடந்த மூன்று தினங்களாக முதல் கால யாக பூஜை துவங்கி, விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் மூன்று கால யாக பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.



இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, திருக்குட நன்னீராட்டு வேள்வி பணி நடைபெற்றது. மேள வாத்தியம் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஒத புனிதநீர் கலசத்தில் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.



இதையடுத்து ஆதீசுவரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று, மகாதீபாரதனை காட்டப்பட்டது. விழாவில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிவனடியார்கள், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...