கேரள ரயிலில் போதைப் பொருள் கடத்தல் - கோவையில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்!

கேரளாவில் இருந்து ரயில் மூலம் கோவைக்கு வந்த திருவனந்தபுரம் விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 3.5 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.


கோவை: கேரளாவில் இருந்து கோவை வந்த திருவனந்தபுரம் விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக கோவை ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து கோவை ரயில் நிலையம் வந்த திருவனந்தபுரம் விரைவு ரயிலில் ஏறி போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அங்கு பொதுஜன பெட்டியில் இருந்த கழிவறை அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையை எடுத்து சோதனை செய்தபோது, அதில் மூன்று பண்டல்களில் சுமார் 3.492 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இது குறித்து அந்த பெட்டியில் வந்த பயணிகளிடம் போலீசார் கேட்டபோது, அது தொடர்பான விவரம் யாருக்கும் தெரியாத நிலையில், அங்கிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அதை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த ரயிலில் கஞ்சாவை கடத்தி வந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...