கோவை வடக்கு மண்டலத்தில் வரும் 25ஆம் தேதி சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்!

கோவை வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண். 4, 10, 11, 21 ஆகிய பகுதிகளுக்கான சிறப்பு பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் சரவணம்பட்டி வார்டு அலுவலகத்தில் வரும் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், தங்களது சொத்து வரி விதிப்பு, குடிநீர் இணைப்பு ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில் சிறப்பு பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் வரும் 25ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் முதல்முறையாக மண்டல தலைவர் வே.கதிர்வேலின் உத்தரவின் பேரில் வரும் 25 ஆம் தேதி மண்டல தலைவர் கதிர்வேல் தலைமையில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில், வார்டு எண். 4,10,11, 21 பகுதிகளில் உள்ள வரிதாரர்கள் தங்களது சொத்துவரி விதிப்பு, குடிநீர் இணைப்பு ஆகியவற்றில் பெயர் திருத்தம், கதவு எண் திருத்தம், தெருவின் பெயர் திருத்தம் மற்றும் முடிவுற்ற பழைய சொத்துவரி புத்தகங்களுக்கு புதிய சொத்துவரி புத்தகம் பெறலாம்.

இந்த சிறப்பு குறைதீர்ப்பு முகாமில் பெயர் திருத்தம், இனிஷியல் திருத்தம், கதவு எண் திருத்தம், தெருவின் பெயர் திருத்தம், தொலைபேசி எண் திருத்தம் மற்றும் பதிவு செய்தல் முடிவுற்ற சொத்துவரி புத்தகத்திற்கு பதிலாக புதிய சொத்துவரி புத்தகம் வழங்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

திருத்தங்களை மேற்கொள்வதற்காக வரும் பொதுமக்கள் தங்கள் சொத்துவரி செலுத்திய ரசீது நகல் (2023-24), குடிநீர் கட்டணம் செலுத்திய ரசீது நகல் (2023-24), சொத்து தொடர்பான ஆவண நகல், இதர ஆவணங்கள் ஏதேனும் ஒரு அடையான அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...