ஈஷாவுக்கு வந்த BNI-ஐ சேர்ந்த இளம் தொழிலதிபர்கள் - உடல், மன நல யோகா வகுப்புகளில் பங்கேற்றனர்!

BNI அமைப்பின்‌ கோவை ரிதம்‌ சேப்டரை சேர்ந்த 25க்கும்‌ மேற்பட்ட இளம்‌ தொழிலதிபர்கள்‌ ஈஷா யோகா மையம்‌ வந்து உப யோகா, ஈஷா க்ரியா உள்ளிட்ட பல்வேறு சக்திவாய்ந்த யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர். மன அழுத்தம் குறைந்து உடல் நலமாக இருப்பதாக உணர்வதாக பயிற்சியில் பங்கேற்ற தொழிலதிபர்கள் தெரிவித்தனர்.


கோவை: ஈஷா யோகா மையத்திற்கு வருகை தந்த கோவை BNI-ஐ சேர்ந்த இளம்‌ தொழிலதிபர்கள்,‌ உடல்‌ மற்றும்‌ மன நலத்தை மேம்படுத்தும்‌ யோகா மற்றும் ஈஷா ஒரியா வகுப்புகளில் பங்கேற்றனர்.

இதுதொடர்பாக ஈஷா மையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தொழில்‌ உலகில்‌ சக்கி வாய்ந்த பின்புலம்‌ உடைய BNI அமைப்பின்‌ கோவை ரிதம்‌ சேப்டர்‌-ஐ சேர்ந்த 25-க்கும்‌ மேற்பட்ட இளம்‌ தொழிலதிபர்கள்‌ ஈஷா யோகா மையம்‌ வந்து யோகா பயிற்சிகளை கற்றுக் கொண்டனர்‌.



ஈஷா சார்பில்‌ இரண்டு நாள்‌ பயிற்சியாக உப யோகா, ஈஷா க்ரியா உள்ளிட்ட சக்திவாய்ந்த பயிற்சிகள்‌ வழங்கப்பட்டன. மேலும்‌ ஆதியோகி திவ்யதரிசனம்‌, தியானலிங்கத்தில்‌ நாத ஆராதனை, லிங்க பைரவியில்‌ அபிஷேகம்‌, நாட்டு மாடுகளை பராமரிக்கும்‌ மாட்டுமனை உள்ளிட்ட நிகழ்வுகளில்‌ பங்கேற்றனர்‌.

BNI என்பது உலகளவில்‌ 75 நாடுகளில்‌ 300,000 உறுப்பினர்களை உடைய உலகின்‌ முன்னணி வணிக பரிந்துரை அமைப்பாகும். BNI உறுப்பினர்கள்‌ பிராந்திய தேசிய மற்றும்‌ உலகளாவிய BNI ஊழியர்களால்‌ தீவிரமாக ஆதரிக்கப்படுகிறார்கள்‌. அவர்கள்‌ தங்கள்‌ வணிகங்களை வளர்ப்பதற்கும்‌, தங்களுடைய இலக்குகளையும்‌ தாண்டி சாதிப்பதற்கும்‌ தேவையான பயிற்சி, கட்டமைப்பு மற்றும்‌ தொழில்நுட்பத்தை வழங்குகிறார்கள்‌.

இங்கு கற்றுக்கொண்ட பயிற்சிகள்‌ மூலம்‌ அவர்களின்‌ உடல்‌ மன நலம்‌, திறன்மிக்க தொழிலதிபராக தேவையான தெளிவு, கூர்மை உள்ளிட்ட பலன்கள்‌ கிடைக்கப்‌ பெற்றதாக மகிழ்ச்சியுடன்‌ பகிர்ந்து கொண்டனர்‌.

ஐங்கரன்‌ டெக்ஸ்டைல்ஸ்‌ உரிமையாளர்‌ அங்கு அய்யப்பன்‌,‌ தனது அனுபவம்‌ குறித்து பேசியதாவது, எனக்கு எப்போதும்‌ மன அழுத்தம்‌, டென்சன்‌ இருக்கும்‌. இங்கு வந்து இன்று காலை யோக பயிற்சிகள்‌ செய்த போது நிறைய மாற்றம்‌ தெரிகிறது. தொடர்ந்து ஷாம்பவி தியானம்‌ உள்ளிட்ட பயிற்சுகளை செய்து வந்தால்‌ குடும்ப வாழ்க்கை, தொழில்‌ என எல்லாவற்றிலும்‌ திறம்பட இயங்க முடியும்‌ என்று புத்துணர்வோடு பகிர்ந்து கொண்டார்‌.

பேபி வேர்ல்ட்‌ உரிமையாளர்‌ அமர்‌ கூறியதாவது, இது மிகவம்‌ வித்தியாசமான அனுபவம்‌. இந்த பயிற்சிகளை தொடர்ந்தால்‌, தொழில்‌ மற்றும்‌ வாழ்க்கையில்‌ முன்னேற்றம்‌ ஏற்படும்‌. இங்கு பரிமாறப்பட்ட உணவுகளும்‌ வித்தியாசமாகவும்‌, சத்தானதாகவும்‌ இருந்தது என்று தனது அனுபவத்தை பகிர்ந்தார்‌.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...