வால்பாறையில் 3வது நாள் யானைகள் கணக்கெடுப்பு பணி - வனச்சரகர், வன அலுவலர்கள் பங்கேற்பு!

தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வனப்பகுதியில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணிகள் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், 3வது நாளான இன்று கோவை வால்பாறையில் உள்ள நீர்நிலை பகுதிகளில் உள்ள யானைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.


கோவை: யானைகள் குறித்த 3வது நாள் கணக்கெடுக்கும் பணியில் இன்று, வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் நீர்நிலைகளுக்கு அருகேயுள்ள யானைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒருகினைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் தமிழகத்தில் கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் உட்பட வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் உடுமலை அமராவதி ஆகிய ஆறு வனச்சரகங்களில் 3 நாட்கள் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

யானைகள் கணக்கெடுக்கும் பணியில் வனச்சரகர் தலைமையில் வனக்காப்பாளர், வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட குழுவுக்கு 4 பேர் வீதம் 34 குழுக்களாக 136 பேர் இப்பணியில் ஈடுபட்டனர்.

முதல் நாள் நேரடியாக யானைகளை பார்ப்பது, 2ம் நாள் நேர்கோட்டு பாதையில் 2 கிமீ தூரம் சென்று கணக்கிடுவது 3வது நாள் நீர்நிலைகள் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் நேரடியாக யானைகளை கண்டு கணக்கிடுவது என்ற அடிப்படையில் யானைகள் கணக்கெடுக்கப்படுகின்றன.



இதில் இன்று மூன்றாவது நாளாக வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனசரகங்களில் நீர் நிலை பகுதியில் யானைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.



இதில் மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் நீரார் அணை பகுதியில் யானைகள் நடமாட்டத்தை யானைகள் உள்ளதை கணக்கெடுத்தனர்.



அதேபோல் வால்பாறை வனச்சகர் வெங்கடேஷ் தலைமையில் அக்கா மலை வனப்பகுதிக்குள் நீர்நிலை அருகில் யானைகள் நடமாட்டம் அறிந்து யானைகளின் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த மூன்று நாட்கள் மேற்கொள்ளப்பட்ட யானை கணக்கெடுப்பு குறித்த தகவல்கள் ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...