கனிமவள கொள்ளை தொடர்பான அடுத்தக்கட்ட நகர்வு குறித்து ஒரு வாரத்தில் முடிவு - பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்!

கோவையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, கோவையில் நடைபெறும் சட்டவிரோத கனிமவள கொள்ளை தொடர்பாக அடுத்தகட்ட நகர்வு குறித்து ஒரு வார காலத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சியில் இதுவரை எத்தனை அரசு பணிகள் நிரப்பப்பட்டுள்ளது எனவும் கேள்வி எழுப்பினார்.



கோவை: கோவையில் நடைபெறும் சட்டவிரோத கனிமவள கொள்ளை தொடர்பாக அடுத்தகட்ட நகர்வு குறித்து ஒரு வார காலத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்திற்கு பிறகு அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியதாவது,



கோவை மாவட்டத்தில் நடைபெறும் கனிமவள கொள்ளை தொடர்பாக கடந்த முறை போராட்டம் நடத்தி காலக்கெடு கொடுத்த பிறகு அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கனிமவள கொள்ளை நிறுத்தப்பட்டது.

மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது போன்று தற்போது கொள்ளை துவங்கி உள்ளது. மீண்டும் அரசு இயந்திரத்துடன் போராடுவதா என்ற கேள்வி இருக்கிறது. இதற்கான நிரந்தர தீர்வு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

2 மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி அதிகபட்சம் ஒரு வார காலத்திற்குள் இதற்கான ஒரு முடிவு எடுக்கப்படும். கடந்த முறை அரசு அதிகாரிகள் கொடுத்த உறுதியின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் அதிகாரிகள் பேசிய பேச்சுப்படி நடக்காததால் ஒரு வார காலத்திற்குள் போராட்டம் குறித்த முடிவு எடுக்கப்படும்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அடுத்த 500 நாட்களில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தருவதாக பிரதமர் கூறிய நிலையில், தற்போது ஐந்து தவணைகளில் தலா 21,000 பேர் என்ற அடிப்படையில் அனைத்து இடங்களிலும் தெளிவாக லஞ்சம் இல்லாமல் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அதே வேளையில் தமிழகத்தில் நடத்திய தேர்வுக்கே 2 ஆண்டுக்கு பிறகு முடிவுகள் வெளியாகிறது. ஒரு பக்கம் தேர்வு என்பது ஒரு பெயரளவிற்கு மட்டுமே நடத்தப்படுகிறது. அனைத்து இடங்களிலும் லஞ்ச லாவணியம் இருக்கிறது. திமுக அமைச்சராக இருக்க கூடிய செந்தில் பாலாஜி tnstc நடத்திய தேர்வுக்கு பணம் வாங்கி பதவி கொடுத்ததாகவும், அதற்கு பிறகு பணத்தை திருப்பி கொடுத்து விட்டேன் என கூறினார்.

இப்படிப்பட்ட அமைச்சர் அமைச்சரவையில் இருக்கும் பொழுது எப்படி அரசு இடங்களுக்கு நேர்மையான முறையில் தேர்வு நடத்தப்படும். மக்கள் ஒரு புறம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நாங்களும் தோண்டத் தோண்ட குப்பையை போன்று இவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறோம். இதை மக்கள் மன்றத்தில் வைக்கிறோம்.

இதேபோல் திமுக தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஐந்து ஆண்டுகளில் அரசு பணிகளில் மட்டும் ஆண்டுக்கு 70 ஆயிரம் பணிகள் நிரப்புவதாக கூறியிருந்தனர். 10 லட்சம் வேலை வாய்ப்பு உருவாக்குவதாக கூறினர். அவர்கள் கூறியதைப் போன்று எத்தனை அரசு பணிகளை நிரப்பி உள்ளனர்.

பிரதமரின் வேலைவாய்ப்பு போன்ற ஒரு முடிவு எடுப்பதற்கு துணிவு வேண்டும். நல்ல எண்ணம் வேண்டும், தூய்மையான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்ற சங்கல்பம் வேண்டும் என்று இருக்கையில் மூன்றுமே திமுக விடம் இல்லாத பொழுது எப்படி ஆட்சி பணியை நேர்மையாக நிரப்ப முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...