தென்னை மரங்களில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை முன்னெடுப்பு - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்!

பொள்ளாச்சி அடுத்த மூலனூரில் நடைபெற்ற கருத்தரங்கை தொடங்கி வைத்த அமைச்சர் சாமிநாதன், தென்னை மரங்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் கட்டுப்படுத்துவது குறித்த கையேடுகளை விவசாயிகளுக்கு வழங்கிய பின், தென்னை மரங்களில் ஏற்படும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.



கோவை: தென்னை மரங்களில் ஏற்படும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி அருகேயுள்ள மூலனூர் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் தென்னை நோய் மற்றும் பூச்சி தாக்குதல் கட்டுப்பாடு மற்றும் உர மேலாண்மை கருத்தரங்கம் நடைபெற்றது..

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். பின்னர், தென்னை மரங்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் கட்டுப்படுத்துவதை குறித்து கையேடுகளையும் விவசாயிகளுக்கு வழங்கினார்.

மேலும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் விஞ்ஞானிகள் கலந்து கொண்டு தென்னை மரங்களில் ஏற்படும் பூச்சி தாக்குதல் மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தவது குறித்து செயல் விளக்கத்துடன் விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது,



கொங்கு மண்டலத்தில் கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு, போதிய விலை இல்லை போன்ற காரணத்தால் குறுகிய கால பயிர் சாகுபடியில் கட்டுபடியாகாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தென்னை சாகுபடி மூலம் விவசாயிகளின் வாழ்வாதரத்தை பெருக்கும் வகையில் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது, தென்னை சாகுபடியில் ஏற்படும் பூச்சி தாக்குதல், வாடல் நோய்களை ஒழிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான இலக்கை எட்டுவோம்.

இவ்வாறு அமைச்சர் சாமிநாதன் கூறினார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...