பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியானது - 90.93 சதவீதம் பேர் தேர்ச்சி!

பிளஸ்1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதும், 90.93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், அதிகபட்சமாக கணக்கு பதிவியல் பாடத்தில் 995 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 940 பேரும் 100 சதவீத மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ளனர்.



சென்னை: பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில், 90.93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் நடைபெற்றது. இதில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியானது.

இதனை தொடர்ந்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19) காலை வெளியான நிலையில், பிற்பகல் 2 மணிக்கு பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில் 90.93 சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 7,549 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tnresults.nic.in/ மற்றும் http://www.dge.tn.gov.in/ ஆகிய அரசு தேர்வுத்துறையின் இணையதளங்களில், மாணவர்கள் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

மேலும், மாணவர்கள் குறிப்பிட்டிருந்த மொபைல் எண்ணுக்கும், எஸ்எம்எஸ் வாயிலாக மதிப்பெண் விபரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் ஏராளமான மாணவர்கள் பல்வேறு பாடங்களில் செண்டம் எனப்படும் 100 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

அதன்படி, தமிழ் பாடத்தில் 9 பேரும், ஆங்கிலம் பாடத்தில் 13 பேரும், இயற்பியல் பாடத்தில் 440 பேரும், வேதியியல் பாடத்தில் 107 பேரும், உயிரியல் பாடத்தில் 65 பேரும், கணிதம் பாடத்தில் 17 பேரும், தாவரவியல் பாடத்தில் 2 பேரும், விலங்கியல் பாடத்தில் 34 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 940 பேரும்,

வணிகவியல் பாடத்தில் 214 பேரும், கணக்கு பதிவியல் பாடத்தில் 995 பேரும், பொருளியல் பாடத்தில் 40 பேரும், கணினி பயன்பாடு பாடத்தில் 598 பேரும், வணிக கணிதம், புள்ளியியல் பாடத்தில் 132 பேரும் 100 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...