தொண்டாமுத்தூர் அருகே யானை தாக்கி பெண் படுகாயம்

கோவை தொண்டாமுத்தூர் தென்னமநல்லூர் அருகேயுள்ள ராசு கவுண்டர் தோட்டத்தைச் சேர்ந்தவர் பத்மா(47).அவரை காட்டு யானை தாக்கி படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



கோவை: தொண்டாமுத்தூர் அருகே யானை தாக்கி பெண் படுகாயமடைந்தார்.

கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த ஒற்றை காட்டு யானை, தென்னநல்லூர் அருகே உள்ள ராசு கவுண்டர் தோட்டத்தில் நின்று அங்கு வீட்டிலிருந்த அரிசி மூட்டை வெளியே சாப்பிட்டது.

சத்தம் கேட்டு, வெளியே பத்மா (47) என்பவர் பார்த்தபோது, திடிரென காட்டு யானை அவரை தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



இதையடுத்து அங்கிருந்த யானையை வனத்துறை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனிடையே நரசிபுரம் வெள்ளிமலை பட்டிணம்வடக்கலூர் பகுதிகளில் மற்றொரு காட்டு யானை வழக்கமான நேரத்தில் வராமல் 8 மணிக்கு உலா வந்தது.

இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். அங்கிருந்த வனத்துறை ஊழியர்கள் காட்டு யானையை பத்திரமாக வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். வடக்கலூர் பகுதியில் காட்டு யானை உலா வந்த விடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...