கரூரில் இருந்து பல்லடம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணிகளிடம் கொள்ளையடிக்கும் நோக்கில் மர்ம நபர் ஒருவர் கொடுத்த ஜூசை குடித்த இரண்டு குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர்: கரூரில் இருந்து பல்லடம் நோக்கி வந்த அரசு பேருந்தில் ஜூஸ் கொடுத்து பிக்பாக்கெட் அடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அருகே வேலப்பம்பாளையத்தை சேர்ந்த ரேஷ்மா என்ற பெண்மணி இன்று தனது எட்டு வயது மகன் சர்வேஷ் மற்றும் 7 வயது மகன் மித்ரன் ஆகியோருடன் பல்லடத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கோவை செல்லும் அரசு பேருந்தில் பயணித்துள்ளார்.
அப்போது பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த மர்ம நபர் ஒருவர் கொள்ளை அடிக்கும் முயற்சியில் ரேஷ்மாவிடம் வெயிலுக்கு ஜூஸ் குடிக்குமாறு கொடுத்துள்ளார். ரேஷ்மாவும் ஜூசை குடிக்காமல் தனது இரண்டு குழந்தைகளுக்கு அதனை கொடுத்துள்ளார்.

இந்நிலையில், ஜூசை குடித்த சிறிது நேரத்திலேயே பேருந்து பல்லடம் அருகே வந்தபோது சர்வேஷ் மற்றும் மித்ரன் ஆகிய இரண்டு குழந்தைகளும் மயங்கி விழுந்துள்ளனர். அப்போது, பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் வரவைத்து இரண்டு குழந்தைகளையும் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

2 குழந்தைகளுக்கும் பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு மர்ம நபர் கொடுத்த ஜூசை குழந்தைகளுக்கு கொடுத்ததால் மயக்கமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் அருகே வேலப்பம்பாளையத்தை சேர்ந்த ரேஷ்மா என்ற பெண்மணி இன்று தனது எட்டு வயது மகன் சர்வேஷ் மற்றும் 7 வயது மகன் மித்ரன் ஆகியோருடன் பல்லடத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கோவை செல்லும் அரசு பேருந்தில் பயணித்துள்ளார்.
அப்போது பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த மர்ம நபர் ஒருவர் கொள்ளை அடிக்கும் முயற்சியில் ரேஷ்மாவிடம் வெயிலுக்கு ஜூஸ் குடிக்குமாறு கொடுத்துள்ளார். ரேஷ்மாவும் ஜூசை குடிக்காமல் தனது இரண்டு குழந்தைகளுக்கு அதனை கொடுத்துள்ளார்.
இந்நிலையில், ஜூசை குடித்த சிறிது நேரத்திலேயே பேருந்து பல்லடம் அருகே வந்தபோது சர்வேஷ் மற்றும் மித்ரன் ஆகிய இரண்டு குழந்தைகளும் மயங்கி விழுந்துள்ளனர். அப்போது, பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் வரவைத்து இரண்டு குழந்தைகளையும் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
2 குழந்தைகளுக்கும் பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு மர்ம நபர் கொடுத்த ஜூசை குழந்தைகளுக்கு கொடுத்ததால் மயக்கமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.