கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் விபத்தல்ல, திமுகவின் திட்டமிட்ட சதி - டாக்டர் கிருஷ்ணசாமி குற்றசாட்டு!

விழுப்புரம் அடுத்த மரக்காணம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இடங்களில் கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் விபத்தல்ல, திமுகவின் திட்டமிட்ட சதி என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை: கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் விபத்தல்ல, திமுகவின் திட்டமிட்ட சதி என டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, விழுப்புரம், மரக்காணம், மற்றும் மதுராந்தகம் பகுதிகளில். கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் உயிரிழந்துள்ளனர். 35-கும் மேற்பட்டவர்கள் சிகிச்சையில் இருக்கின்றனர்.

திமுக கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் நேரத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் முழு மதுவிளக்கு கொண்டு வரப்படும் என்று ஸ்டாலின், கனிமொழி, மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிரச்சாரம் செய்தார்கள்.

ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தமிழகத்தில் சட்டவிரோத மது விற்பனை கரைபுரண்டு வருகிறது. மேலும் 50 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் இவ்வளவு பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அரசு விதிக்கப்பட்ட நேரத்திற்கும் மேலாக சட்ட விரோதமாக 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் டாஸ்மாக் மதுவில் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.

இதில் முதல்வர் ஸ்டாலினிற்கும், அவரது குடும்பத்திற்கும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் தொடர்புள்ளது. இதை முறையாக விசாரனை நடத்த வேண்டும். மேலும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தெரியாமல் இவ்வளவு பெரிய கள்ளச்சந்தை வியாபாரம் செய்ய முடியாது.

இது விபத்தல்ல, திமுகவின் திட்டமிட்ட சதி டாஸ்மாக் வியாபாரத்தை பெருக்க திட்டமிட்டு இந்த சதி நடைபெற்று உள்ளது. இதற்கு ஸ்டாலினும், அமைச்சர் செந்தில்பாலாஜி, மற்றும் அமைச்சர் பொன்முடிக்கும் தொடர்பு உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 லட்சம் கொடுத்து மக்களை ஏமாற்றக்கூடாது.

இந்த சதிக்கு ஸ்டாலின், அவரது குடும்பம், மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் முழு பொறுப்பு ஏற்று பதவி விலகவேண்டும். வன விலங்குகள் தாக்கியும், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கொடுப்பதற்கு பணம் இல்லை இப்போது திமுகவின் தவறை மறைக்க உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் கொடுத்து வருகிறார்கள்.

மேலும் தமிழகத்தில் சாராய ஆலைகளை வைத்திருப்பதும், டாஸ்மாக் பார்களை நடத்துவதும் திமுகவினர் தான். அனைத்து தவறுகளும் டாஸ்மாக்கில் இருந்து தான் துவங்குகிறது. இது விபத்தல்ல திமுகவின் திட்டமிட்ட சதி.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...