கோவை அருகே முறையான குடிநீர் விநியோகம் இல்லை - ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

கோவை அடுத்த தீத்திபாளையம் ஊராட்சிக்குட்பட்ட 11வது வார்டில் குடிநீர் விநியோகிக்கப்படாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் வார்டு கவுன்சிலர் மாணிக்கராஜ் தலைமையில் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: தீத்திபாளையம் ஊராட்சிக்குட்பட்ட 11வது வார்டில் குடிநீர் விநியோகிக்கப்படாததை கண்டித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் தீத்திபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட 11ஆவது வார்டில் சரவணா கார்டன் உள்ளது. இந்த பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 15 நாட்களாக முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து ஊராட்சி அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் பேரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பொறுமையை இழந்த அப்பகுதி மக்கள் 11 வது வார்டு கவுன்சிலர் மாணிக்கராஜ் தலைமையில் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இந்நிலையில், பொதுமக்களிடம் தீத்திபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இனி வரும் நாட்களில் சீரான குடிநீர் கொடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் ஊராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...