கோவையில் டிக்கெட் கேட்ட தனியார் பேருந்து நடத்துனரின் விரலை கடித்த நபர் கைது - பரபரப்பு!

கோவை - பொள்ளாச்சி இடையே செல்லும் தனியார் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வரும், உடுமலையைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (47) நேற்று பணியிலிருந்த போது, பேருந்தில் ஏறிய பிரின்ஸ் என்பவரிடம் டிக்கெட் கேட்டபோது, மதுபோதையில் இருந்த அவர், கிருஷ்ணகுமார் விரலை கடித்த நிலையில், அதை தடுக்க முயன்ற மற்றொரு பயணியின் விரலையும் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தனியார் பேருந்தில் டிக்கெட் கேட்ட நடத்துனர் விரலை பயணி ஒருவர் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (47). இவர் கோவை - பொள்ளாச்சி செல்லும் தனியார் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்ற பேருந்தில் கிணத்துக்கடவு வடபுதூர் பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ் (42), என்பவர் பயணம் செய்துள்ளார்.

சுந்தராபுரம் பொங்காளியம்மன் கோவில் அருகே பேருந்து வந்த போது கிருஷ்ணகுமார் பிரின்ஸிடம் டிக்கெட் எடுக்க அறிவுறுத்தியுள்ளார். அப்போது மது போதையில் இருந்த பிரின்ஸ் நடத்துனர் கிருஷ்ணகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் திடீரென கிருஷ்ணகுமாரின் கைவிரல்களை கடித்ததோடு, தாக்கியுள்ளார்.

அப்போது நடத்துனரை காப்பாற்ற வந்த கிருஷ்ணசாமி என்பவரது கையையும் பிரின்ஸ் கடித்துள்ளார். அங்கிருந்த சக பயணிகள் அவரை மடக்கி பிடித்தனர். இதையடுத்து கிருஷ்ணகுமார் போத்தனூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார் பிரின்ஸிடம் விசாரணை மேற்கொண்டு, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...