ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய ராணுவ வீரர் - திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் மனு!

திருப்பூர் அடுத்த இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்து வந்த நிலையில், வெங்கடேசன் என்ற ராணுவ வீரர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.


திருப்பூர்: திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் ஒருவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணமாகி இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.



இந்நிலையில், இவருக்கும், ராணுவத்தில் பணியாற்றும் உறவுக்காரரான வெங்கடேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. வெங்கடேசன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அடிக்கடி நெருங்கி பழகியதால், அவர் கர்ப்பமடைந்துள்ளார்.

இதையறிந்த வெங்கடேசன் தோழியுடன் சேர்ந்து குளிர்பானத்தில் கருகலைப்பு மாத்திரை கலந்து கொடுத்ததால் கரு கலைந்துள்ளது. இதுகுறித்து கேட்டபோது வெங்கடேஷ் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது எனவும், வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இருவரும் தனிமையிலிருந்த போது எடுத்த போட்டோ, வீடியோவை வைத்து கொண்டு, என்னை தொந்தரவு செய்தால் அதை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டி வருகிறார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.



இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் எனக்கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...