பல்லடம் அடுத்த பெத்தாம்பூச்சி பாளையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் இச்சிப்பட்டி ஊராட்சி முழுவதும் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டி அதிகாரிகளிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: பல்லடம் அடுத்த இச்சிப்பட்டி ஊராட்சி முழுவதும் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட இச்சிப்பட்டி ஊராட்சியில் கடந்த மே 1ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கிராம மக்களை வரவழைத்து விட்டு ஊராட்சி தலைவரும் வார்டு உறுப்பினர்களும் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர்.
இதன் காரணமாக தங்களது குறைகளையும் புகார்களையும் ஊராட்சி நிர்வாகத்திடம் சொல்ல முடியவில்லை என்றும், மீண்டும் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் எனவும் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் இச்சிப்பட்டி கிராம மக்கள் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று இச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பெத்தாம்பூச்சிபாளையத்தில் மீண்டும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரவில்லை. 100 குடும்பங்கள் பயன்படுத்தக்கூடிய பொது வழித்தடத்தை ஊராட்சி நிர்வாகத்தின் பெயரில் மாற்றம் செய்யப்பட்டும் இதுவரை சாலை அமைத்து தரவில்லை எனக்கூறி பொதுமக்கள் ஊராட்சி தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக இச்சிப்பட்டி ஊராட்சியில் பல்வேறு இடங்களில் போலியான மது பாட்டில்கள் சட்ட விரோதமாக விற்கப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளிகள் வேலைக்கு வராமல் தொழில் பாதிப்பு அடைவதாகவும் கிராம சபை கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் திடீரென ஊராட்சி மன்ற தலைவரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் போலி மது பாட்டில்கள் விற்பனை குறித்து பலமுறை ஊராட்சி தலைவரிடமும் காவல்துறையிடமும் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போலி மது பாட்டில் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு பொதுமக்கள் சரமாரியாக குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் வேலுமணியிடம் கேட்டபோது, போலி மது பாட்டில் விற்பனையை தடுக்கும் வகையில் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். காவல்துறையிலும் மனு அளித்துள்ளோம் எனவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதனிடையே கிராம சபை கூட்டத்தில், தங்களது கோரிக்கைகள் குறித்து பேச வந்த பொது மக்களுக்கு மைக் கொடுக்காமல் எதுவாக இருந்தாலும் மனுவாக கொடுங்கள் என பொதுமக்களை பேசவிடாமல் தடுத்த நிகழ்வும் அரங்கேறியது.
பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட இச்சிப்பட்டி ஊராட்சியில் கடந்த மே 1ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கிராம மக்களை வரவழைத்து விட்டு ஊராட்சி தலைவரும் வார்டு உறுப்பினர்களும் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர்.
இதன் காரணமாக தங்களது குறைகளையும் புகார்களையும் ஊராட்சி நிர்வாகத்திடம் சொல்ல முடியவில்லை என்றும், மீண்டும் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் எனவும் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் இச்சிப்பட்டி கிராம மக்கள் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று இச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பெத்தாம்பூச்சிபாளையத்தில் மீண்டும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரவில்லை. 100 குடும்பங்கள் பயன்படுத்தக்கூடிய பொது வழித்தடத்தை ஊராட்சி நிர்வாகத்தின் பெயரில் மாற்றம் செய்யப்பட்டும் இதுவரை சாலை அமைத்து தரவில்லை எனக்கூறி பொதுமக்கள் ஊராட்சி தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக இச்சிப்பட்டி ஊராட்சியில் பல்வேறு இடங்களில் போலியான மது பாட்டில்கள் சட்ட விரோதமாக விற்கப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளிகள் வேலைக்கு வராமல் தொழில் பாதிப்பு அடைவதாகவும் கிராம சபை கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் திடீரென ஊராட்சி மன்ற தலைவரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் போலி மது பாட்டில்கள் விற்பனை குறித்து பலமுறை ஊராட்சி தலைவரிடமும் காவல்துறையிடமும் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போலி மது பாட்டில் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு பொதுமக்கள் சரமாரியாக குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் வேலுமணியிடம் கேட்டபோது, போலி மது பாட்டில் விற்பனையை தடுக்கும் வகையில் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். காவல்துறையிலும் மனு அளித்துள்ளோம் எனவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதனிடையே கிராம சபை கூட்டத்தில், தங்களது கோரிக்கைகள் குறித்து பேச வந்த பொது மக்களுக்கு மைக் கொடுக்காமல் எதுவாக இருந்தாலும் மனுவாக கொடுங்கள் என பொதுமக்களை பேசவிடாமல் தடுத்த நிகழ்வும் அரங்கேறியது.