கோவை நீதிமன்ற வளாகத்தில் லோக் அதாலத் - மாவட்ட முதன்மை நீதிபதி பங்கேற்பு!

கோவை நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்று வருகிறது. காசோலை வழக்கு, வாகன விபத்து, நிலப்பிரச்சனை உள்ளிட்ட நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுவருகிறது.



கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் தலைமையில் நடைபெற்று வரும் இந்த மக்கள் நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.



குறிப்பாக நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், நிலம் சம்பந்தமான வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்படும். அதன்படி இன்று நடைபெற்று வரும் மக்கள் நீதி மன்றத்தில் பல்வேறு மனுதாரர்கள் வருகை புரிந்து அவர்களது வழக்குகளுக்கு தீர்வு கண்டு வருகின்றனர்.



இதில் கோவை காடம்பாடி பகுதியைச் சேர்ந்த அரவிந்த் கிருஷ்ணன் என்பவரது விபத்து வழக்கிற்கு தீர்வு காணப்பட்டு, தனியார் இன்சூரன்ஸ் மூலம் 18 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. இதனை முதன்மை நீதிபதி ராஜசேகர் வழங்கினார்.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...