கோவையில் டிஐஇ சார்பில் மகளிருக்கான தொழில்முனைவோர் ஏர்ஸ்வீ பயிற்சிப் பட்டறை


வாரங்காலில் நடைபெற்ற முதலாவது பயிற்சி பட்டறையின் வெற்றியைத் தொடர்ந்து, டிஐஇ குளோபல் கோவையில் நான்கு நாள் பயிற்சி பட்டறை நடந்தது. அகில இந்திய அளவில் தொழில் முனைவோரை உருவாக்கி, மகளிர் பொருளாதாரத்தை உயர்த்துதல் என்ற இந்த பயிற்சி பட்டறைக்கு தேவையான உதவிகளை இந்தியாவில் உள்ள அமெரிக்கா மிஷன் ஏற்பாடு செய்திருந்தது.

கோவை ரேஸ்கோர்ஸ்-யில் உள்ள தாஸ் சுர்யா விவாந்தாவில் நேற்று நடைபெற்ற பயிற்சிப் பட்டறையில் ஏர்ஸ்வீ திட்டத்தின் தலைவி சீமா சதுர்வேதி பங்கேற்று பேசுகையில், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள இளம் பெண்களின் முன்னேற்றம் தான் எங்களது நோக்கம். வாய்ப்புள்ள பெண்களுக்கு தொழில் வாய்ப்பு அளிப்பது பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும். 



ஏர்ஸ்வீ திட்டமானது அவர்களது நிலையை உயர்த்தி பிரச்சனைகளை சமாளித்து வாய்ப்புகளை பயன்படுத்தி, வெற்றிகரமான தொழில் முனைவோருக்கான தீர்வுகளை அளிப்பதாகும்" என்றார்.

இந்திய ஆலோசக ஹேமலதா அண்ணாமலை பேசுகையில், இந்த திட்டத்துக்கு நல்ல வரவேற்க கிடைத்ததையடுத்து 150 பேர் பல்வேறு போட்டிகளுக்கு இடையே தேர்வு செய்யப்பட்டனர்.



தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு சமுதாய பொருளாதார பின்னணியை உடையவர்கள். இவர்களது தொழில் முனைவோர் வெற்றியை காண விரும்புகிறோம்" என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகத்தின் கலாச்சார பிரிவு கவுன்சிலர் டாக்டர் க்ரேக் எல்.டிக்கர் இப்பயிற்சி பட்டறையில் பங்கேற்று பேசுகையில், தொழில் முனைப்பில் பெண்களின் பங்கு அவசியமானது. சிறந்த துவக்க நிலைக்கு தேவையானது, மிக முக்கியமானது.

இந்தியாவில் ஒரு நட்பு ரீதியான தொழில்முனைப்பு சூழலை உருவாக்க இந்த ஒரு வார கால பயிற்சி பட்டறை ஒரு முன் உதாரணமாக அமையும். டிஐஇ குளோபல் மற்றும் டிஐஇ கோவை இணைந்து கோவையில் இந்த பயிற்சி பணிமனையை நடத்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்" என்றார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...