கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து  தேரை இழுத்தனர்.

கோவையின் காவல் தெய்வமாக கருதப்படும் கோணியம்மன் கோவில் டவுண்ஹால் பகுதி பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவில் தேர்திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியோடு துவங்கியது.

பின்னர்  பிப்ரவரி 21ம் தேதி கொடியேற்று விழாவும், பிப்ரவரி 26ம் தேதி திருவிளக்கு வழிபாடும் நடத்தப்பட்டு நேற்று திருகல்யாண உற்சவமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேர் பவனி  நிகழ்ச்சியானது நடைபெற்றது.



இந்த தேரோட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி.நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்சுனன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். ராஜவீதியில் உள்ள தேர்நிலை திடலில் இருந்து துவங்கிய தேரோட்ட நிகழ்ச்சியானது ஓப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பண்ண கவுண்டர் வீதி வழியாக மீண்டும் தேர்நிலை திடலை அடைந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

கோனியம்மனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்றும் வழக்கம் போல் இந்த ஆண்டும் தேரோட்ட நிகழ்ச்சி சிறப்பாக அமைந்து இருந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...