கோவை லங்கா கார்னர் சுரங்கப்பாதையில் வெள்ளநீர் வெளியேற்றம்

கோவையில் பெய்த கனமழையால் லங்கா கார்னர் பகுதி சுரங்கப்பாதையில் தேங்கிய வெள்ளநீர் வெளியேற்றப்படுவதை மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்துவருகிறது. அந்த வகையில், நேற்று பெய்த கனமழையால், லங்கா கார்னர்‌ பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில்‌ வெள்ளநீர் தேங்கியது.

இதனை, வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையர் பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌. அப்போது, உதவி ஆணையர்‌ மகேஷ்கனகராஜ்‌, உதவி பொறியாளர்‌ விமல்ராஜ்‌, சுகாதார அலுவலர்‌ குணசேகரன்‌, சுகாதார ஆய்வாளர்‌ தனபால்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்.

இதேபோல், கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.19க்குட்பட்ட எம்‌.கே.பி. காலனி பகுதியில்‌ நேற்று இரவு பெய்த கன மழையில்‌ மரம்‌ ஒன்று பெயர்ந்து விழுந்தது.



இதனை, கோவை மாநகராட்சி மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, விழுந்த மரத்தை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்‌. அப்போது மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...