துடியலூரில் திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்!

கோவை மாவட்டம் துடியலூர் பகுதிக்கழக திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், பகுதிக்கழக பிரதிநிதிகள் பங்கேற்று திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.



கோவை: கோவை மாவட்டம் துடியலூரில் திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே திமுக சார்பில், திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.



துடியலூர் பகுதிக்கழக திமுக செயலாளர் அருள்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 1வது வட்ட செயலாளர் ராஜசேகர் அனைவரையும் வரவேற்றார்.

முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் வெ.நா.பழனியப்பன், மூத்த வழக்கறிஞர் அருள்மொழி, பகுதி அவைத்தலைவர் பழனிசாமி, துணை செயலாளர்கள் சண்முகசுந்தரம், குமார், ஐ.டி. பகுதி ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம், மாவட்ட பிரதிநிதிகள் சதீஸ்குமார், சோமசுந்தரம், தன்ராஜ், சம்பத்குமார், அருண்குமார், 2, 13, 14, 15 வட்ட கழக செயலாளர்கள் சண்முகம், சுந்தரம், சோமசுந்தரம், ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக திமுக தலைமை கழகப் பேச்சாளர் உடுமலை தண்டபாணி கலந்துக் கொண்டு திமுக 2 ஆண்டு சாதனைகள் குறித்து பேசினார்.

இந்த கூட்டத்தில் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், 1வது மாமன்ற உறுப்பினர் கற்பகம், 2வது மாமன்ற உறுப்பினர் புஷ்பமணி, மதிமுகவை சேர்ந்த 14வது மாமன்ற உறுப்பினர் சித்ரா தங்கவேல், பொதுக்குழு உறுப்பினர் கதிர்வேல்சாமி உட்பட பொதுக்குழு உறுப்பினர்கள், அணி செயலாளர்கள், துணை அமைப்பாளர்கள், 1, 2, 13, 14, 15 வட்ட கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...