கோவை அருகே சம்பளம் கேட்க சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கட்டிட தொழிலாளி மீது வழக்குப்பதிவு!

கோவை நெகமம் அருகே கட்டிட வேலை செய்யும் இடத்தில் பெண் ஒருவருக்கு உடன் பணியாற்றும் கட்டிட தொழிலாளி விஜயன் என்பவர் பாலியல் துன்புறுத்தல் அளிப்பதாகவும், வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



கோவை: கோவை அருகே சம்பளம் கேட்கச் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டிய கட்டிட தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் நெகமம் அடுத்த வெள்ளாளபாளையம் பகுதியை சேர்ந்த 35 வயது இளம்பெண் ஒருவர் தான் வேலை செய்யும் இடத்தில் உடன் பணிபுரியும் கட்டிட தொழிலாளி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருவதாக புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, நான் கட்டிட வேலை செய்து வருகிறேன். எனக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். நான் எனது ஊரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி விஜயன் (45) என்பவருடன் கட்டிட வேலைக்கு சென்று வருகிறேன்.

வேலை செய்யும் இடத்தில் விஜயன் தொடர்ந்து என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகிறார். இது குறித்து நான் கட்டிட உரிமையாளரிடம் தெரிவித்ததை தொடர்ந்து அவர் விஜயனை கண்டித்து அனுப்பினார்.

இந்நிலையில், சம்பள பணம் வாங்குவதற்காக விஜயனின் வீட்டிற்கு சென்ற போது, அவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். அப்போது, நான் சத்தமிட்ட நிலையில், இங்கு நடந்ததை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டினார்.

எனவே எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வரும் கட்டிட தொழிலாளி விஜயன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.

புகாரின் பேரில் வேலை செய்யும் இடத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...