போக்குவரத்து ஊழியர்களுக்கான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்குக..! - திருப்பூரில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளம் தீர்மானம்!

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான சம்பளம், ஓய்வு கால பணப்பலன், அகவிலைப்படி ஆகியவற்றிற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து ஆண்டு தோறும் வழங்கிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளன மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



திருப்பூர்: அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்ட பணப்பலன்களுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளன மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம்மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் சம்மேளனத்தின் மாவட்ட பொது குழு கூட்டம் திருப்பூர் பல்லடம் சாலையில் தனியார் விடுதியில் நடைபெற்றது.



இந்த கூட்டத்திற்கு பின் போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனத்தின் மாநில பொருளாளர் குணசேகரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பென்ஷன், அகவிலைப்படி,ஓய்வு கால பணப்பலன்களை பெற தொழிற்சங்கங்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக எட்டாவது ஊதியக்குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

ஆனால் அதிலும் 8 ஆண்டு காலமாக தொழிலாளர்களுக்கான பணப்பலன்கள்இதுவரை வழங்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசு தேர்தல் கால வாக்குறுதிகள் அளித்ததை நிறைவேற்றி தர வேண்டும்,மின்வாரிய அரசு ஊழியர்களுக்கு போன்று அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கும் ஆண்டுதோறும் பட்ஜெட்டில் பென்ஷன், ஓய்வு கால பணப்பலன், ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீடு செய்து ஆண்டுதோறும் தொழிலாளர்களுக்கு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...