கோவையில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய தாதாவுக்கு வலைவீச்சு - மும்பையில் முகாமிட்டுள்ள தனிப்படை!

கோவையில் கொலை மற்றும் கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அடைக்கலம் தருவது, ஜாமீனில் எடுப்பது போன்ற உதவிகளை செய்து வந்த பிரபல தாதா தில்லி என்பவரை பிடிக்க தனிப்படை போலீசார் மும்பையில் முகாமிட்டு தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவையில் பல்வேறு குற்றச்சம்பவங்களின் பின்னணியில் இருப்பதாக கருதப்படும் தாதாவை தேடி கோவை தனிப்படை போலீசார் மும்பையில் முகாமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து இரண்டு படுகொலை சம்பவங்கள் நடைபெற்றன. இதில் ரவுடி கோஷ்டிகளுக்கும், கஞ்சா விற்பனையாளர்களும் சம்பந்தப்பட்டிருப்பதை கண்டறிந்த போலீசார் அவர்களை ஒடுக்கும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாகமாநகரில் வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்தவர்கள், தொடர்ந்து குற்றங்கள் ஈடுபடுவோர் என 600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதான குற்றவாளிகள் பலரது பின்னணியில் தில்லி என்ற மர்ம நபர் இருப்பது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரளாவை சேர்ந்த இந்த நபர் கொலை செய்யும் ரவுடிகள், கஞ்சா விற்பனை செய்பவருக்கு பின்புலமாக இருந்து பண உதவி செய்து, தன் வளையத்திற்குள் வைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

கொலை செய்துவிட்டு தப்பித்து செல்லும் ரவுடிகளுக்கு அடைக்கலம் தருவது அவர்கள் கைது செய்யப்பட்டால் வக்கீல் மூலம் ஜாமீன் எடுப்பது போன்ற வேலைகளையும் அந்த நபர் செய்து கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த நபர் இதுவரை போலீசில் பிடிபடவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தில்லி என்ற அந்த நபரை கைது செய்ய திட்டமிட்டகோவை தனிப்படை போலீசார் சென்னை, மும்பை நகரங்களில் முகாமிட்டு தீவிரமாக தேடி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...