தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு -  94.03 சதவீதம் மாணவ-மாணவியர் தேர்ச்சி

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவியரின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில் இந்தத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி வெளியிட்டார். தேர்வெழுதிய 8.03 லட்சம் பேரில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.


தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 3,324 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை நடைபெற்றது.

இந்தத் தேர்வுக்கு 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத்திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 90 சிறைக் கைதிகள் என ஒட்டுமொத்தமாக 8.65 லட்சம் பேர் வரை பதிவு செய்திருந்தனர். அவர்களில் 8.17 லட்சம் மாணவர்கள் தேர்வில் கலந்துகொண்டனர். சுமார் 48,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை.

தேர்வுகள் அனைத்தும் முடிந்ததும், மாணவ-மாணவிகள் எழுதிய விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஏப்ரல் மாதம் 10-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 79 மையங்களில் நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து,மாணவ-மாணவியரின் மதிப்பெண்கள் பாடவாரியாகப் பதிவேற்றப்பட்டு, முடிவுகளை வெளியிடுவதற்குத் தயார் நிலையில் இருந்தன.

இந்நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி இன்று வெளியிட்டார்.இதில், 8.03 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 7,55,451 லட்சம் மாணவ-மாணவியர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

மொத்த தேர்ச்சி விகிதம் 94.03 சதவீதம் ஆகும். இவர்களில் மாணவியர் 4,05,753 (96.38%) பேரும், மாணவர்கள் 3,49,697 (91.45%) பேரும்மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் அடங்குவர்.

இந்தாண்டும் வழக்கம்போல், மாணவர்களைவிட மாணவிகள் 4.93% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில், 97 சதவீதத் தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...