கோவை அருகே நொய்யல் ஆற்றில் ரசாயனக் கழிவு நீர் கலப்பு - காற்றில் பறக்கும் நுரையால் மக்கள் அச்சம்!

கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனியில் இருந்து பட்டண பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள நொய்யல் ஆற்றில் நுரை ததும்பும் ரசாயன கழிவுகள் தண்ணீரில் கலந்து செல்கின்றன. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.



கோவை: குப்பை, பிளாஸ்டிக் கழிவு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனங்கள் உள்ளிட்ட கழிவுகளுடன் நொய்யல் ஆறு பயணித்து வருகிறது.



கோவை மாவட்டத்தில் தற்போது கோடை மழை பெய்து வரும் நிலையில் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.



இதனைப் பயன்படுத்தி, கோவையில் உள்ள தொழிற்சாலையில் பட்டறைகளில் இருந்து சாயம், ஆயில் உள்ளிட்ட ரசாயன கழிவுகள் வெளியேற்றப்பட்டு நொய்யல் ஆற்று நீரில் கலக்கப்படுகின்றன.

இதனால், கோவை ஒண்டிப்புத்தூர் நெசவாளர்காலனியில் இருந்து பட்டணம் பகுதி செல்லும் வழியில் உள்ள அணைக்கட்டில், நொய்யல் ஆறானது சாக்கடை கழிவு நீர் கலந்த நிலையில், கருமை நிறமாக காட்சியளிக்கிறது.



ஆற்றில் கலக்கப்படும் இதுபோன்ற கழிவுகளால், காற்றில் அவற்றின் நுரைகள் பறந்து வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...