சித்ரா பவுர்ணமி நாளில் வெள்ளியங்கிரிமலை ஏறிய மேலும் ஒருவர் பலி!

கரூர் மாவட்டம் கடவூரை சேர்ந்த குமார் (40), சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலையில் ஏறிய போது, மயங்கி விழுந்து சம்பவ இடத்தில் பலியானார். அவரை சோதித்த மருத்துவ உதவியாளர், மாரடைப்பில் குமார் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார்.


கோவை: வெள்ளியங்கிரி மலையில் ஏறிய மேலும் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கரூர் மாவட்டம் கடவூரை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் குமார் (40). இவர் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று இரவு கோவை பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு வந்துள்ளார். இன்று மதியம் ஏழாவது மலைக்குச் சென்ற குமார் அங்கு சுயம்புலிங்கத்தை தரிசனம் செய்து விட்டு மீண்டும் கீழே இறங்கி உள்ளார்.

அப்போது ஆறாவது மலைக்கு வந்த போது திடீரென மயங்கி விழுந்த குமாரை அங்கிருந்த வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்டு, மலையடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் இருந்த உதவி மருத்துவர் சோதனை செய்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

குமார் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்ட ஆலாந்துறை போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...