மூன்றாம் தர அரசியல் செய்ய வேண்டாம்..! - ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு கோரிக்கை

இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறது. மதசார்பற்ற நாடு என்பதை மதசார்புள்ள நாடுதான் என்பதை ஆளுநர்கள் பேசுவது, அரசியல் தலைவர்கள்போல் ஆளுங்கட்சிக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை பரப்பி வருவதும், மாடல் அழிந்துவிட்டது என்பதுபோல செல்வதும் சரியாக இல்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை மாவட்டம் சூலூரில் வர்த்தக சங்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:



கோவை மாவட்ட வணிகர் சங்க மாநாட்டிற்கு வருகை தந்தது மகிழ்ச்சியாக உள்ளது. அரசு வர்த்தகர்களை அழைத்து பேசி, நிதிநிலை அறிக்கை தயார் செய்து அதன்படி அவர்களுக்கு உதவி செய்து வருகிறது.

ஏற்கனவே வேளாண்மைக்கு செஸ்வரி போட்டு திரும்ப பெறப்பட்டது. 10 சதவீதம் மின் கட்டண சலுகை வழங்கியதும் இந்த அரசுதான். ஒரு லட்சம் ரூபாயாக இருந்த இழப்பீட்டுத் தொகையை மூன்று லட்சம் ரூபாயாக உயர்த்தியது திமுக அரசுதான்.

ஆளுநர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பணியாற்ற வேண்டியவர்கள். அதிலிருந்து தவறாமல் பணியாற்றினால் நன்றாக இருக்கும். மதசார்பற்ற நாடு இந்தியா. இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெறுகிறது. மதசார்பற்ற நாடு என்பதை மதசார்புள்ள நாடுதான் என்பதை ஆளுநர்கள் பேசுவது, அரசியல் தலைவர்கள்போல் ஆளுங்கட்சிக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை பரப்பி வருவதும், மாடல் அழிந்துவிட்டது என்பதுபோல செல்வதும் சரியாக இல்லை.

இந்தியாவில் மக்களாட்சி தத்துவம்தான் சிறந்தது. அரசியலமைப்புச் சட்டம்தான் சிறந்தது. மக்களாட்சி சட்டம்தான் நடைபெறுகிறது. இதனைத் தெரிந்து சொல்கிறார்களா? தெரியாமல் சொல்கிறார்களா? என்று தெரியவில்லை.

வெடிவிபத்து தொடர்பாக விரைவான நடவடிக்கை தமிழக அரசு எடுத்தது. இது தொடர்பாக உள்துறை மற்றும் பிரதமர், குடியரசு தலைவர்களை சந்தித்து புகார் தெரிவிக்காமல் நான்காம்தர அரசியலை ஆளுநர் செய்கிறார். சட்டத்துக்கு புறம்பாக பேசி மூன்றாம் தர அரசியல் ஆளுநர் செய்ய வேண்டாம்.

இந்தியாவில் ஓபிசிக்கு கொடுக்கக்கூடிய மருத்துவ படிப்பில், இட ஒதுக்கீடு இந்தியாவிற்கு பெற்றுத் தந்தது திராவிட அரசுதான். ஆளுங்கட்சியைவிட எதிர்க்கட்சி இருந்தால் அதிக அளவில் வாய்ப்பு கொடுக்கிறோம். தமிழ்நாட்டில் மட்டும் இருந்த திராவிட மாடல் இந்தியா முழுவதும் சென்று உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...